பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகளையும் விளக்கியுள்ளார்.
நேற்று மேற்கு மாவட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பருத்தி விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சரை தொடர்புகொண்டு, முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…