சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 20,000 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,600 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…