முதலமைச்சர் பழனிசாமி ஸ்டாலினின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் !

Published by
Venu

ஒக்கி புயல் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார் .
அவர் கூறிய பதில் , புயல் சின்னம் உருவாகும் முன்பே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.30.11.2017 வானிலை ஆய்வு மையத்தில் புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்டது.
புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்ட பின்னர் மீனவ மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது . அரசின் நடவடிக்கையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த 1,124 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 11,986 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.3,522 மீனவர்கள் இதுவரையில் பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளனர். கடைசி மீனவரை மீட்கும் வரையில் தேடும் பணி தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த 14 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயலினால் பாதித்த விவசாய நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் அதற்கான நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்படும் என  முதலமைச்சர் பழனிசாமி    ஸ்டாலின் கேள்விக்கு  பதிலளித்தார்…
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago