மாநில உரிமைகளை பறிக்காதீர்கள்..! பிரதமர் மோடிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடிதம்.!

Default Image

துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார்.

அதில், ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை வெகுவாக பாதிக்கிறது.

மேலும், இந்த மசோதாவில், கடலோர பகுதிகளில் இருக்கும் சிறு துறைமுகங்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆதலால் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கும் அம்சங்களை மசோதாவில் இருந்து அகற்ற வேண்டும் ‘ என அதில் குறிப்பிட்டுள்ளளார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்