உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.விரும்பிய இடத்திற்கு செல்வதால் காவலர்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களின் நலன்காக்க மாவட்ட, மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது.
அதன்படி,சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து,அவர்களின் பணி மாறுதல் விருப்பம் தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்தார்.
இந்நிலையில்,”உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ் 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…