முதல்வர் பழனிச்சாமியின் உருவபொம்மை எரிப்பு.. ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு!

Default Image

திருச்சியில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவபொம்மையை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பேரூந்துநிலையத்தில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமியின் உருவப்படத்தை தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் எரித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகு மீது தேசத்துரோக வழக்கு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்