தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் கூறியதாவது, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை உள்ள மாவட்டங்கள் நிதியை பகிர்ந்துகொண்டு குடிநீர் விநியோகம் பணியை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருப்பதால் குடிநீர் விநியோகம் பணியில் சுணக்கம் ஏற்பட கூடாது.

கிராமப்புறங்களில் வறண்டு போன ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்ற நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் என்பதால் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கடந்தாண்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மேற்கு மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இதனால் மேற்கு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களுக்கு நேரில் சென்று தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago