தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் கூறியதாவது, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை உள்ள மாவட்டங்கள் நிதியை பகிர்ந்துகொண்டு குடிநீர் விநியோகம் பணியை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருப்பதால் குடிநீர் விநியோகம் பணியில் சுணக்கம் ஏற்பட கூடாது.

கிராமப்புறங்களில் வறண்டு போன ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்ற நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் என்பதால் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கடந்தாண்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மேற்கு மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இதனால் மேற்கு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களுக்கு நேரில் சென்று தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!

கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…

15 minutes ago

விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…

17 minutes ago

“கிரிக்கெட் உலகிற்கு விராட் கோலி ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்” – மார்கஸ் ஸ்டோய்னிஸ்.!

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…

1 hour ago

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

2 hours ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

2 hours ago

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

3 hours ago