Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
அமலாக்கத்துறையிலானரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்து இருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான தலைமை செயலக சட்ட அலுவல் பணிகள் முடிந்தவுடன் இந்த ஆலோசனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே, ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…