Tamilnadu CM MK Stalin [File Image]
சென்னை: மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் ஆகிய நிகழ்வுகளில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் ஜூலை 11ஆம் தேதி தருமபுரியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியிலும் , அடுத்து, கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2023, டிசம்பர் 18ஆம் தேதி தமிழக அரசால் தொடங்கபட்ட மக்களுடன் முதல்வர் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 8.74 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலனை செய்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டம் அடுத்து ஜூலை 11ஆம் தேதி அனைத்து கிராம பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அதே போல, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14,40,351 மாணவர்கள் பயன்பெறுள்ளனர்.
மேற்கண்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் ஜூலை 15 கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளன்று அனைத்து கிராமப்புறங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனை திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். அதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளனர்.
அதே போல, ஜூலை 11இல் தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளனர்.
அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் இந்த நிகழ்வில், அனைத்து எம்எல்ஏக்களும், எம்பிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…