தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புதிய நிலக்கரி இயந்திரத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தூய்மை பணியாளருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலக்கரி இறக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.
325 கோடிக்கு புதிய இயந்திரம் : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு தற்போது புதியதாக நிலக்கரி இறக்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு சார்பில் சுமார் 325 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாடுகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
80 கோடி ரூபாய் சேமிப்பு : இந்த 325 கோடி ரூபாய் புதிய நிலக்கரி இறக்கும் இயந்திரம் மூலம் அதிக திறன் கொண்டு நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரையில் நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். ஒரு டன்னிற்கு (1000 கிலோ) 700 ரூபாயில் இருந்த செலவானது தற்போது 500 ரூபாயாக குறையும். இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வருடத்திற்கு 80 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கும் எனவும் கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…