2021இல் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது நிதித்துறை பொறுப்பானது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தமிழக நிதித்துறையை திறம்பட கையாண்டு வந்தார் அமைச்சர் பி.டி.ஆர். இப்படியான சூழலில் கடந்த மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுக்கப்பட்டது.
இதற்கு பின்னணியில் அப்போது வெளியான ஒரு ஆடியோ இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் பற்றி பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என்பதை பிடிஆர் அப்போதே தெளிவுபடுத்தினார். இதனை அடுத்து முதல்வருடனான சந்திப்பு பிறகு அமைச்சரவை துறை மாற்றம் நிகழ்ந்தது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் இந்த முறை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இந்நிலையில், இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ள Umagine TN 2024 எனும் 2 நாள் தொழில்ட்ப மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பம் 3 தலைமுறைகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.
திருச்சி என்ஐடி, எம்ஐடி, வெளிநாடுகளில் படிப்பு வேலை என்று இருந்தாலும், தாய் நாட்டிற்கு சேவை ஆற்ற தனது அறிவாற்றலை தமிழக மக்களுக்கு அளிக்க பணியாற்றி வருகிறார் பழனிவேல் தியாகராஜன். அவர் நிதித்துறையில் இருந்த போது பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.
அதே போல, அவர் தலைமையில் தகவல் தொழில்நுப்ட துறையில் பல்வேறு மாற்றங்கள் வேண்டும் என்றே அவரை இந்த துறைக்கு மாற்றினேன். இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதற்கு இந்த மாநாடு தான் சாட்சி என கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில் கீழே விழுந்தார் பாடிகார்ட்.. ஒரே அடியில்…
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…