விஷச்சாராய விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள்… முதல்வர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.  இந்த கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உரையாற்றினார். அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஷச்சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாத பராமரிப்புத் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை தமிழக அரசே ஏற்கும். பெற்றோரை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாய் வைப்புநிதித் தொகை வழங்கப்படும்” எனவும் கவனஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.! திருமாவளவன் அறிவிப்பு.!

விழுப்புரம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு…

9 hours ago

லெபனான் தொடர் தாக்குதல்! ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் அரபு நாடுகள்?

லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக்…

10 hours ago

தொடருமா நட்பு? வீட்டிற்குள் சீரியல் தோழிகள்? பிக் பாஸ் போட்ட பக்கா திட்டம்!!

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நிகழ்ச்சி…

10 hours ago

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ‘தளபதி 69’ படத்தில் இணைந்த இளம் மலையாள நடிகை.!

சென்னை : நடிகர் விஜய்யின் கடைசி படமான  'தளபதி 69' படத்தை இயக்குநர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அப்டேட்களை KVN…

10 hours ago

“திமுகவுக்கு கிடுக்குபிடி போட்ட திருமா., விசிக மாநாட்டிற்கு முழு ஆதரவு.!” டி.டி.வி.தினகரன் பேட்டி.!

சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார்.…

10 hours ago

நவராத்திரி முதல் நாள் பிரசாதம்.. அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி.?

சென்னை- நவராத்திரி பூஜைக்கு முதல் நாள் நெய்வேத்தியமான வெண்பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான…

10 hours ago