சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் ,வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று  மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

  இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வேதுறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், ரயில்வே துறை டெல்லி- சென்னை மற்றும் சென்னை -டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்தது.  

பிரதமர் மோடி நேற்று  5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழ்கத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவையை வருகின்ற 31-ஆம் தேதி வரை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது.குளிர் சாதன வசதிகள் கொண்ட இந்த ரயில்கள் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து  ரயில் பயணிகளையும்  பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு ,இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும்,அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு , பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும் ,தொற்று இல்லாதவர்களை  தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டும்.மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.  

 

Recent Posts

தூத்துக்குடி to இலங்கை., ரூ.20 லட்சம் பொருட்கள் கடத்தல்.! 4 பேர் அதிரடி கைது.! 

தூத்துக்குடி to இலங்கை., ரூ.20 லட்சம் பொருட்கள் கடத்தல்.! 4 பேர் அதிரடி கைது.!

தூத்துக்குடி : மஞ்சள் மூட்டைகள் பீடி இலைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் இருந்து…

4 mins ago

“விராட்டை கேட்டதா சொல்லுங்க”…பெண் ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித் சர்மா!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப்…

19 mins ago

“ஜோசியகாரர் பழனிச்சாமி., செல்லாக் காசு பழனிச்சாமி.,” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

55 mins ago

விஜய் குறித்து பேசிய சிறுத்தை சிவா! சூர்யா கொடுத்த ரியாக்சன்!

சென்னை :இன்றைய காலகட்டத்தில் எதார்த்தமாகப் பிரபலங்கள் செய்யும் விஷயங்கள் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…

1 hour ago

வைத்தியலிங்கம் வீட்டில் ED ரெய்டு.! 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை..,

சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு…

2 hours ago

முதன்முறையாக ஈரான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி! சந்திப்பில் நடந்தது என்ன?

இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல்…

2 hours ago