வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க ரூ.4445 கோடி தேவை ..! முதலமைச்சர் பழனிசாமி ரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை

Published by
Venu

தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி .இந்நிலையில் இன்று  டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்ணா மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் வைக்க கோரிக்கை வைத்தேன்.அதேபோல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வலியுறுத்தியுள்ளேன். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்.மேலும் காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான் என்றும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளேன். துணை முதலமைச்சர்- தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago