சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் போதகரர்களுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் சான்றிதழ் இனி நிரந்தரமாக வழங்கப்படும். அதன்படி, கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். அரசுசாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்தல், மானியம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சிறும்பான்மையினர் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்குள் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் சிறும்பான்மை பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதை 58-ஆக உயர்த்த பரிசீலினை செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறும்பான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவர நிதிநிலை அறிக்கையில் பரிசீலினை செய்யப்படும்.

வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, புனரமைப்பு பணிக்கான இடர்பாடுகளை களைய குழு அமைக்கப்படும். யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு 3 மாதத்துக்குள் நியமனம் அங்கீகாரம் வழங்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நல்ல செய்தி வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

Recent Posts

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

2 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

2 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

3 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

4 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

4 hours ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

5 hours ago