கொரோனா நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 1 வருடமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது. பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும்.
12-ஆம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட்டு விட்ட நிலையில் பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். மாணவர்கள் நலன் கருதி அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…