இந்த தேர்தலோடு திமுகவுக்கு மூடுவிழா நடத்தப்படும் – பரப்புரையில் முதல்வர் பேச்சு

Published by
பாலா கலியமூர்த்தி

நான் உழைத்து அரசியலுக்கு வந்துள்ளேன், ஸ்டாலின் போல் எந்த உழைப்பும் இல்லாமல் பொறுப்புக்கு வரவில்லை என பரப்புரையில் முதல்வர் பேசியுள்ளார்.

தருமபுரி, பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், இது வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. இவ்வளவு மக்கள் சக்தி பெற்ற கட்சியை தொடர்ந்து தரக்குறைவாக ஸ்டாலின் பேசி வருகிறார் என குற்றசாட்டியுள்ளார்.

இந்த தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும். இது திமுகவின் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் அனைவரையும் மதிக்க வேண்டும், மற்றவர்களை இகழ்ந்து பேசுவது, சிறுமைப்படுத்தி பேசுவது, கேவலப்படுத்தி பேசுவது என்பது அழகல்ல, கிடைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளது. அதனால் இப்படி பேசி வருகிறார் என விமர்சித்துள்ளார்.

ஆகவே, மு.க.ஸ்டாலின் பண்போடு நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள். யார் மற்றவர்களை மதிக்கிறார்களோ, அவர்கள்தான் ஏற்றம் பெறுவார்கள். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைவரையும் மதிக்கக்கூடிய கட்சி, அதனால்தான் தொடர்ந்து நாங்கள் ஏற்றது கண்டு வருகிறோம். நான் உழைத்து ஒவ்வொரு பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த இடத்திற்கு வந்தவன், ஸ்டாலின் எந்த உழைப்பில் வந்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதியின் செல்வாக்கில்தான் தற்போது ஸ்டாலின் வந்துள்ளார். கலைஞரே ஸ்டாலினை நம்பவில்லை, உண்மையில் ஸ்டாலின் மீது நம்பிக்கை இருந்தால், கலைஞர் உடல்நலம் குறைவு இருக்கும்போதே திமுக தலைவர் பொறுப்பு கொடுத்திருப்பார். ஸ்டாலினுக்கு திறமை இல்லை அதனால்தான் கொடுக்கவில்லை என்றும் என்றைக்கும் உழைப்பு, உயர்வை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

11 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

12 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago