நிறைவு பெறுகிறது பிரச்சாரம் ! வாக்காளர்கள் அல்லாதவர்கள் வெளியேற உத்தரவு

Default Image
  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 
  • முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளை  மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. 

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தது.இதன் பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊராக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஆனால் அதில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்தது.அதன்படி  வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 27,30ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை  டிசம்பர்  25,28 ஆகிய தேதிகளில் ஓய்கிறது .தேர்தல்பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்