மூடப்பட்ட சுங்கச்சாவடிகள்! கட்டணமின்றி செல்லும் வாகனஓட்டிகள்!

Published by
லீனா

கொரோனா வைரஸால் மூடப்பட்ட  சுங்கச்சாவடிகளால், கட்டணமின்றி வாகனங்கள் பயணிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில் ஊழியர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது  என்றும், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்த பிறகு சுங்கச்சாவடியை இயக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் நேற்று மதியம் 2.30 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்நிலையில், சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago