மூடப்பட்ட சுங்கச்சாவடிகள்! கட்டணமின்றி செல்லும் வாகனஓட்டிகள்!

Default Image

கொரோனா வைரஸால் மூடப்பட்ட  சுங்கச்சாவடிகளால், கட்டணமின்றி வாகனங்கள் பயணிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில் ஊழியர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை சுங்கச்சாவடியை இயக்கக்கூடாது  என்றும், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்த பிறகு சுங்கச்சாவடியை இயக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் நேற்று மதியம் 2.30 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்நிலையில், சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்