பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது – அன்புமணி
பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறுகையில், பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. புகையிலை பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து விற்கப்படுகிறது .எனவே புகையிலை விற்கும் கடைகளில், குழந்தைகளுக்கு விருப்பமான பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.