காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டு, காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனை. ஐ.நா.வாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் அனைவரது கவலையும் காலநிலை மாற்ற பிரச்சனைகளில் தான். காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல.
இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மானுடத்தின் முக்கிய பிரச்சனையாக காலநிலை மாற்றம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை தமிழ்நாடு அரசு மிக முக்கிய பிரச்சனையாக கருதுகிறது. சூழலை போற்ற வேண்டியதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியது தமிழ் சமூகம்.
மேலும் முதல்வர் பேசுகையில், பசுமை திட்டங்களுக்கான அனுமதி ஒற்றை சாளரம் முறையில் வழங்கப்படும். பசுமை நிதியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரம் பனை மரங்களை நடும் திட்டம் தொடங்கப்படும். நாட்டில் வேறு எந்த மாநில அரசும் முன்னெடுக்காத நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு முன்னெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…