இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Default Image

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாகிறது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில்,இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.இன்று காலை 9.30 மணிக்குhttps://tnresults.nic.in,https://dge1.tn.nic.inhttps://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக ,மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் வருகின்ற 17 ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக அரசுத் தேர்வுத்துறை படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் ( http://www.dge.tn.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 17 முதல் முதல் 25-ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price
ceasefire in J&K