உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கிடையே தகராறு 3 பேருக்கு அருவாள் வெட்டு ஒருவர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
  • அதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இளையராஜா என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார்.

பின்னர் இவர்களுக்குள் வேட்பு மனு பரிசீலனையின் போது முரண்பாடாக இருந்தாக கூறப்படும் நிலையில், வாக்குப்பதிவின் போது மேட்டூர் வாக்குச்சாவடியில் இளையராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் முடிந்ததது. அப்போது வாக்குச்சாவடிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த மாசானசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசு மற்றும் ராமசாமி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் வெட்டுக்காயம் அடைந்த மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே இளையராஜாவின் ஆதரவாளரான மாரியப்பன் என்பவரை தூத்துக்குடி வடக்கு பரம்பு பகுதியில் சுற்றி வளைத்த சிலர் அவரை கல்லால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மாரியப்பனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதலால் அப்பகுதியே போர்களமாக காணப்பட்டது. ஒட்டப்பிடாரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

11 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

12 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

14 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

16 hours ago