குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கூட்டம் தொடங்கியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்தார் .இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதனால் 40-க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில், தலைமை காஜி சலாவுதீன் ,ஹஜ் கமிட்டியின் அபு பக்கர்,மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா,டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…