தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா…! எப்போது தெரியுமா…?

Default Image

தேமுதிக சார்பில் வரும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.

தேமுதிக சார்பில் வரும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளதா விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘தே.மு.தி.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா. சாதி, மதம் இவற்றை புறம் தள்ளி, ஒற்றுமையை போற்றும் வகையில் வருடந்தோறும் எல்லா பண்டிகைகளையும் தேமுதிக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் வருகிற சனிக்கிழமை காலை 8 மணியளவில் (25.12.2021) கிறிஸ்துமஸ் தினத்தன்று(St. Thomas Mount) புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் (St. Patrick’s Church) தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்