மதுரை மக்கள் கவனத்திற்கு.. கள்ளழகர் திருவிழாவில் இந்த விஷயத்திற்கு தடை.!

Published by
மணிகண்டன்

Madurai Chithirai Festival : கள்ளழகர் திருவிழாவில் உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது .

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன் பிறகு, வரும் ஏப்ரல் 22இல் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற இருக்கிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது பலரும், ஆற்றங்கரை ஓரம் இருந்து வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பது வழக்கம். அப்போது சில சமயங்களில் உயர் அழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் அழகர் சிலை மற்றும் ஆபரணங்களுக்கு சேதம் ஏற்படும் எனவும், மேலும் பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் மக்கள் சிரமப்படுவார்கள் என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, உயர் அழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மோட்டருக்கு பதிலாக பரம்பரிய முறைப்படி தோல் பைகள் கொண்டு மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும். அதுவும், தண்ணீர் தெளிக்க விரதம் இருப்போர் முன்பாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், ஆற்றங்கரை பகுதியில் இருந்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

31 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

2 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

3 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

4 hours ago