விமான நிலையம் வந்த சீன பயணி.! திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சீன பயணி ஒருவரை சந்தேகம் அடைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து வைரஸ் இல்லையென்றாலும், அரசின் அறிவுருத்தலின் அவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகநாடுகள் அனைத்தும் சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனை செய்ததுக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்று அறிவித்தது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவை உலக நாடுகள் தனிமை படுத்தியுள்ளன. அந்த வகையில்

சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் 42 வயதான வு சென் சூ என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரம் செல்வதற்கு நேற்று இரவு  (சனிக்கிழமை) மதுரை விமான நிலையம் வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர். அப்போது இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உதவியுடன் மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், வு சென் சூ வை சுகாதர குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும், இந்திய அரசு அறிவுருத்தலின் அங்கிருந்து உடனடியாக அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago