இறந்த தாய் தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள் ..!

Default Image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவை சார்ந்தவர் கோபால்(73)வந்தவாசி கூட்டுறவு நிளவள வங்கியில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கோதை.இவர்களுக்கு ராம்குமார் ,லட்சுமணகுமார் என இரண்டு மகன்களும் ,சுமதி என்ற ஒரு  மகளும் உள்ளனர்.
இந்த தம்பதி உயிருடன் இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளிடம் ஒரு வாக்குறுதியை பெற்று உள்ளனர்.அதாவது நாங்கள் இறந்த பிறகு எங்களது உடலை மருத்துவகல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன் கோதை இறந்து உள்ளார்.இதனால் இவரது உடலை மேல்மருவத்தூர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நேற்று காலை கோபால் இறந்து உள்ளார்.தந்தையின் வாக்குறுதி படி ராம்குமார் ,லட்சுமணகுமார் கோபால் உடலை தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்