குழந்தை விற்பனை வழக்கு : அமுதாவிற்கு மே 23 வரை நீதிமன்றக்காவல்

Default Image

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவிற்கு மே 23 வரை நீதிமன்றக்காவல் என்று நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.இன்று சிபிசிஐடி விசாரணை முடிந்து அமுதாநாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவிற்கு மே 23 வரை நீதிமன்றக்காவல் என்று நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்