நாளை டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.

திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். பின்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தஞ்சை செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir