குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அவர்கள் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…