நீட் தேர்வை நடத்தலாம் என முதலமைச்சர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தாருங்கள்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சம்பிரதாயமாக கடிதம் எழுதியதும், ‘கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்தலாம்’ என்று முதலமைச்சர் திரு.பழனிசாமி இன்று சொல்லி இருப்பதும் அதிமுக அரசின் பச்சைத் துரோகங்கள்.
தமிழகத்தில் நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக முதலமைச்சர் பேசுவது விசித்திரம்.சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; எஜமானர்களை எதிர்த்துக் கேட்கும் தெம்பில்லாத அதிமுக அரசு கமுக்கமாக கைவிட்டுவிட்டது.
தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – செல்வங்கள் அனிதா, சுபஸ்ரீயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.சட்டமன்றத்தைக் கூட்டி, ‘நீட் தேர்வை நடத்த மாட்டோம் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்’ என்று பிரகடனப்படுத்த வேண்டும் – நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு.அரசியல் காரணங்களுக்காக அதிமுக அரசு நழுவிப் போக நினைத்தாலும் தி.மு.க அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…