நீட் தேர்வை நடத்தலாம் என முதலமைச்சர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தாருங்கள்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சம்பிரதாயமாக கடிதம் எழுதியதும், ‘கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்தலாம்’ என்று முதலமைச்சர் திரு.பழனிசாமி இன்று சொல்லி இருப்பதும் அதிமுக அரசின் பச்சைத் துரோகங்கள்.
தமிழகத்தில் நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக முதலமைச்சர் பேசுவது விசித்திரம்.சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; எஜமானர்களை எதிர்த்துக் கேட்கும் தெம்பில்லாத அதிமுக அரசு கமுக்கமாக கைவிட்டுவிட்டது.
தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – செல்வங்கள் அனிதா, சுபஸ்ரீயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.சட்டமன்றத்தைக் கூட்டி, ‘நீட் தேர்வை நடத்த மாட்டோம் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்’ என்று பிரகடனப்படுத்த வேண்டும் – நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு.அரசியல் காரணங்களுக்காக அதிமுக அரசு நழுவிப் போக நினைத்தாலும் தி.மு.க அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…