கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்தனர் .
இந்த நிலையில் மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணையி லிருந்து வருகின்ற 15.7.2020 புதன் கிழமை முதல் அடுத்த மாதம் ஜூலை 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, ஒரு விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் நீரை அனைத்து விவசாய பெருமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…