கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..!

Default Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி  குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்தனர் .

இந்த நிலையில் மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணையி லிருந்து வருகின்ற 15.7.2020 புதன் கிழமை முதல் அடுத்த மாதம் ஜூலை 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, ஒரு விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று  முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் நீரை அனைத்து விவசாய பெருமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
donald trump harvard university
anil kumble Andre Russell
DMK senthil balaji
JDVance MEET PM MODI
Seeman
KKR VS GT