தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில், இந்த எட்டு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி, வள்ளியூர் – திருச்செந்தூர், பழனி – தாராபுரம் , ஆற்காடு – திண்டிவனம், மேட்டுப்பாளையம் – பவானி, அவிநாசி -மேட்டுப்பாளையம், பவானி – கரூர் உள்ளிட்ட சாலைகளை 500 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…