#BREAKING: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை தொடங்கியது.!

Default Image

கடந்த ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டது. இதன் மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 இந்த ஆலோசனைக்கு பின்னர், புதிய கல்வி தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும், பள்ளிகளை திறப்பது,  10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் தொடர்பாக  இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்