முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிப்பு ! முதலமைச்சர் ,  துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை

Default Image

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில்,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை  (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில்  நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.மேலும் முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
Heavy rains
Narendra Modi lion
mk stalin about all party meeting
Tamilnadu CM MK Stalin
12th Public exam
kl rahul