#BREAKING: +2 தேர்வு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்- அன்பில் மகேஷ்..!

Default Image
  • பிளஸ் டூ பொதுத் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை பெற்றது.
  • பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார்.

பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளிடம் இன்று காணொளி மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கேட்பு ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில், மாணவர்களின் நலனைக் கருதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 13 கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்தனர். இவர்கள் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தையும் முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்