Tamilnadu CM MK Stalin [File Image]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிடங்களுக்கு சென்றாலே அவருக்கு பொன்னாடைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தனக்கு பொன்னாடை போர்த்துவதை விட, புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி முதல்வர் அவரகள், அரசு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றாலே அவருக்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் புத்தகங்களை கொடுத்து வரவேற்பது வழக்கமாக உள்ளது.
பிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அந்த வகையில், முதல்வர் அவர்கள், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை சேமித்து வைத்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்கி வருவது வழக்கம். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்பளிப்பாக வழங்கிய புத்தகங்களில் 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த புத்தகங்களை சிறை துறை இயக்குனர் அவர்கள் பேரருட் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…