முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.!

Default Image
  • தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களிக்க சிலுவம்பாளையம்  வந்து உள்ளார்.
  • தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ,மகன் மற்றும் மருமகள் அனைவரும் வாக்களித்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இன்று முதற்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களிக்க சிலுவம்பாளையம்  வந்து உள்ளார்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ,மகன் மற்றும் மருமகள் அனைவரும் வாக்களிக்க வரிசையில் நின்று வாக்களித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk