ஜூன் 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா மேலும் கூடுதல் தளர்வுகள் என்ன என்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.இந்நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக முதல்வர், அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறார்.
அதன்படி ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீடிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இன்று 11 மணியளவில் சுகாதார துறை அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பதாக முக்கியமான அறிவிப்புகள் சில வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…