முதல்வர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு – நாகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்.!

நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கொரோனா தடுப்பு கநடவடிக்கைகள் குறித்தும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், நாளொன்றுக்கு 70,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025