முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூரில் உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்று,தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆட்சிப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை செல்கிறார்.ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதல்வர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி,நாளை மதியம் சாலை வழியாக திருவாரூர் சென்று,மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.அதனைத் தொடர்ந்து,காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர்,பயணத்தை முடித்து விட்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…