தி.மலையில் ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

Default Image

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது,விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில்,திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்த நிலையில்,1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்