#Breaking:பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சென்னை:கொரோனாவை தடுக்கும் வகையில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்க முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,நாடு முழுவதும் முதற்கட்டமாக இன்று முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்ப்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

குறிப்பாக,தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்ட பணியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இமேஜ் கலையரங்கில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்படி,இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் (2021 ஏப்ரல் 14 க்கு முன் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்) நிறைவடைந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களுக்கு,முதல் மற்றும் 2 ஆம் தவணையின்போது எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ,அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக 3 வது முறை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில்,தமிழகத்தில் 36 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான நிலையில்,முதற்கட்டமாக,இன்று 4 லட்சம் பேருக்கு 3 வது டோஸ் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

4 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago