கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.
நேற்று இரவு முதல் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதே நிலை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு 200 மில்லி மீட்டருக்கும் அதிக மழை சென்னையில் பெய்துள்ளது.
இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில்,அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் எனவும்,பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…