சென்னை:பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது.
அதன்படி,கேள்வி நேரத்தின்போது,பல்கலைக் கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேரவையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு,பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறுகையில்:”மகாராஷ்டிரா,மேற்கு வங்கத்தை தொடர்ந்து,பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில்,பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக,பல்கலைக் கழக துணை வேந்தர்களை நேரடியாட ஆளுநர் நியமனம் செய்து வரும் நிலையில்,பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதனால்,இந்த முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…