திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து,இந்த இரண்டு திட்டங்களையும்,தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும், முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் போன்றோர் அரசு நகரப்பேருந்திகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதன்படி,11,449 திருநங்கைகளில் 2956 திருநங்கைகள் மட்டுமே ரேசன் குடும்ப அட்டை வைத்துள்ளனர்.தற்போது அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…