நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. – முதல்வர் ஸ்டாலின்.
சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் மற்ற மாநில அரசு பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
கொளத்தூரில், ஜவகர் நகர் பகுதியில் 111.80 கோடி அரசு செலவில் 840 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இவ்வாறு பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் வருகையில், அங்குள்ள ஒரு குடிசை பகுதியை மறைக்க சுவர் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் முதல்வர் பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…